Friday 1 August 2014

செய்திகள் 

BSNL BOARD வாரியக்கூட்டம் 05/08/2014 அன்று நடைபெறும் என்று தெரிகின்றது. JTO,TTA மற்றும் இந்தி மொழிபெயர்ப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் 
வாரியக்கூட்ட ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளன. 

ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் வெளியிடப்படாத 
JTO போட்டித்தேர்வு முடிவுகளை தமிழகத்தில் உடனடியாக  வெளியிடக்கோரி மத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் 2014-15ம்  ஆண்டிற்கான 
DROP WIRE ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ONGC நிறுவனம் தொலைத்தொடர்பு தேவைகளுக்காக  BSNL  மற்றும் MTNL நிறுவனங்களுடன்  5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னைக்கூட்டுறவு சங்கம் தனது
 செயல்பாடுகளுக்காக விருது பெறவுள்ளது.

2013-14ம் நிதியாண்டில் நமது BSNL நிறுவனம் தரைவழி தொலைபேசி சேவையில் ஏறத்தாழ 15000 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது.(14979 கோடி)

2014 செப்டம்பர் 2 அன்று மாநிலம் தழுவிய பணிக்குழு கூட்ட 
கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 7 அன்று JAC சார்பில்  நாடு தழுவிய கோரிக்கை தினம்.

ஆகஸ்ட் 13, 14 தேதிகளில் AIBSNLPWA அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கத்தின் தமிழ்மாநில மாநாடு நெல்லையில் நடைபெறுகின்றது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி சிறப்புரையாற்றுகின்றார்.

No comments:

Post a Comment