Thursday 16 October 2014

ஈடில்லா...  இழப்பு
தோழர். A.முருகேசன், TM
அறந்தாங்கி

மறைவு : 09/10/2014 
முருகேசன்...
அறந்தாங்கி நகரிலே.. சங்கத்தைத் தன் 
சிரந்தாங்கி வளர்த்த தோழன்..

காரைக்குடியின் கெளரவ அழைப்பாளன்...

அவனில்லாத நிகழ்வு அண்மையில் ஏதுமில்லை...

செயலாற்றல் மிக்க பதி அவன்..

சேதுபதியின் சிறகு அவன்..

பாசத்திற்கு என்றும்  பணிந்தவன்..
பாதகத்தை எதிர்க்கத் துணிந்தவன்..

சுறுசுறுப்பு நிறைந்தவன்..
சுயநலம் அறியாதவன்...

அன்பே உருவானவன்..
அமைதி நிறைவானவன்... 

முனைப்பு மிக்கவன் முருகேசன்..

அன்பெனும் பிணைப்பு மிக்கவன் முருகேசன்..

கலை இலக்கியத்தை நேசித்தவன்...
காலத்தே காரியங்களை  செய்திட்டவன்..

காலத்தே காரியங்களை செய்துவிட்டதால்.. 

காலத்தே காலனிடமும் சென்றுவிட்டான்..

மனிதர்களை நாள்தோறும் சந்திக்கலாம்..

முருகேசனை நாம் இனி என்று சந்திப்போம்?

பிரிவு என்னும் காயத்திற்கு... 

காலமே மருந்து.. 

முருகேசன் பிரிவிற்கு.. 
எது இங்கு மருந்து?... ஏது இங்கு மருந்து?...

1 comment:

  1. அன்பின் ஆகச்சிறந்த அடையாளம் நீங்கள்!

    மரணம் உன்னத நட்பை சுவாசிக்க, எங்களிடமிருந்து பறித்துக்கொண்டது உங்களை...

    எம் விழி வழி நீரால் நெஞ்சத்து வலிகளை மலர்களாக்கி

    அன்பின் ஆத்மாவிற்கு அஞ்சலியாய் செலுத்துகிறோம்...

    ReplyDelete