Friday 24 October 2014

இரங்கல் 

இராமநாதபுரம் பகுதி அழகன்குளம் 
தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர். K.சீனி TM அவர்கள் 

24/10/2014 அன்று உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 
நமது ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகின்றோம். 


சிறு நீரகம் பழுதடைந்த நிலையிலும்..
தன் கடைசி நாள் வரை... 
தொலைபேசி பழுதுகளை நீக்கியவர் சீனி...
INDOOR என்றும் OUTDOOR என்றும் 
மேல்மாடி என்றும் கீழ்மாடி என்றும் 
ஊழியர்கள் தங்களது சுயநலத்திற்காக 
தொழிற்சங்கங்களை 
உலுக்கியெடுக்கும் காலத்திலே..

நலிவடைந்த உடல் நிலையிலும்..
நாள்தோறும் 40 கிலோமீட்டர் பயணம் செய்து 
நாணயத்துடன் பணி செய்தவர் தோழர்.சீனி...

அவரது மறைவு 
இயக்கத்திற்கு இலாக்காவிற்கு இழப்பு...
இறுதிச்சடங்கு உதவித்தொகையை 
வழக்கமாக  தவணையாக தாமதமாக
வழங்கும் காரைக்குடி மாவட்ட நிர்வாகம் 
இம்முறையாவது...
சீனியின் பூதவுடல்... 
பூவுலகை விட்டுப்போகுமுன்னே.. 
உதவித்தொகையை உரிய நேரத்தில் 
வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்...
உண்மையாய் உழைத்த ஊழியனுக்கு 
நிர்வாகம் செலுத்தும் மரியாதை இதுவேயாகும்...

No comments:

Post a Comment