Tuesday 18 November 2014

நான் கடவுள் 
முகவை  அகம் பாவியின் முக விலாசம்..

நான்  கடவுள்...
நான்  ஏழுமலையின் தெய்வம்... 
நான்  ஏழேழு காலத்திலும் திருந்தாத  ஜென்மம்... 

நான்  எல்லோருக்கும் படியளப்பவன்...
நான்  நல்லோரை படியில் போட்டு மிதிப்பவன்..
நான்  மெத்தப்படித்தவன்... 
நான்  மட்டுமே M.E., முடித்தவன் (ME ONLY ) 

நான்  FNTOவில் சேர்ந்திருந்தேன்...
நான்  NFTEயில்  இணைந்திருந்தேன்...
நான்  BSNLEUவில்  பிணைந்திருந்தேன்...

நான்  SNEAவைப்  பார்த்தவன்..
நான்  OAவால்  வாழ்ந்தவன்... 
நான்  EAவால்  வாழ்பவன்..

நான்  பார்க்காத சங்கம் இல்லை..
நான்  கொடுக்காத சந்தா இல்லை...
நான்  வளர்ந்திட யாருக்கும் வால் பிடிப்பேன் ..
நான்  வாழ்ந்திட  யாருக்கும் கால் பிடிப்பேன்..

நான்  சித்தார்கோட்டையில் பணி செய்தவன்..
நான்  செங்கோட்டையையும் பணிய வைப்பவன்...
நான்  பணிய மாட்டேன்.. யாருக்கும்...
நான்  பணியே செய்ய மாட்டேன் என் மூச்சுக்கும்..

நான்  12 மணிக்கு பணிக்கு வருவேன்..
நான்  அங்கு அரை மணி மட்டுமே ஆசி வழங்குவேன்..
நான்  இரகசிய குறிப்பேடுகளின் பிரம்மா...
நான்  இரகசிய சேட்டைகளின் கர்மா...

நான்  உத்திரவிடப் பிறந்தவன்..
நான்  ஊழலை வளர்ப்பவன்...
நான்  பிடுங்கலைக் கொடுப்பவன்..
நான்  பிடுங்கவே... முடியாதவன்..

நான்  பக்கத்து தொழிலில் பணம் பார்ப்பவன்..
நான்  பக்கத்து துணையை பதம் பார்ப்பவன்..
நான்  அலைபேசியில் ANSWER பண்ணாதவன்..
நான்  தொலைபேசியை தொட்டுப் பார்க்காதவன்..

நான் பதவியில் உள்கதவு (INDOOR)
நான் திறக்க மாட்டேன் மனக்கதவு..
நான் திருந்தவே மாட்டேன்...
நான்  தவறுகளுக்காக வருந்தவே மாட்டேன்..
நான் கடவுள்...


(இராமநாதபுரம்  தொலைபேசி நிலையத்தில்
 நேர்மையாய் உழைத்து .. நித்தமும் 
அதிகார திமிர்த்தனத்தை எதிர்கொள்ளும் 
தோழர்களுக்காக எழுதப்பட்டது...)

1 comment:

  1. ஒரு சிறு திருத்தம். நுழைந்த நாள் முதல் அவர் FNTOவில் இருந்ததில்லை. அவரை அனுமதிப்பதில்லை என்பது முதல்நாள் அவருடன் பழகிய சில நிமிடங்களில் எடுத்த முடிவு

    ReplyDelete