Monday 17 November 2014

जीवन प्रमाण 
DIGITAL LIFE CERTIFICATE 
இலக்க முறை உயிர்ச்சான்றிதழ்

ஓய்வு பெற்ற தோழர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தாங்கள் ஓய்வூதியம் பெறுமிடத்திலே நேரடியாக சென்று தாங்கள் உயிருடன் இருப்பதாக உயிர்ச்சான்றிதழ்  தர வேண்டும். இல்லையெனில் ஓய்வூதிய இலாக்கா அங்கீகரித்துள்ள அதிகாரிகளிடம் இருந்து 
சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 

தற்போது இந்த நடைமுறையை மாற்றி இணையத்தின் வழியாக உயிர்ச்சான்றிதழ் வழங்கும் முறையை 
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இதற்காக புதிய இணைய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஓய்வூதியர்கள் தங்களது SMART செல்போன் அல்லது கணிணி மூலம் தங்களுடைய புள்ளி விவரங்களை ஒருமுறை பதிவு செய்து விட்டால் பின் ஆண்டு தோறும் BIOMETRIC  முறையில் புதுப்பித்துக்கொள்ளலாம். 

தற்போது மத்திய அரசில் 
ஏறத்தாழ 50 லட்சம் ஓய்வூதியர்களும், 
அதே அளவு மாநில அரசுகளிலும், 
25 லட்சம் பேர் இராணுவத்திலும்,
இன்னும் பலர்  பொதுத்துறைகளிலும்
 ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.  

இந்தியாவின் பல கோடிகளிலும்  ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் 
ஒரு கோடிக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். 
 நகர்ப்புற மூத்த குடிகளுக்கு பாதகமில்லை. 
கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு 
கணிணி வசதி வசப்படுமா என்பதுதான் கேள்வி... 

எப்படியோ..
இன்றைய அவசர உலகில் இதயத்தை யாரும் மறக்கலாம்...
இணையத்தை யாரும் மறக்கவோ..மறுக்கவோ முடியாது.

No comments:

Post a Comment