Sunday 9 November 2014

செய்திகள்

கல்கத்தாவில் நடைபெற்ற BSNLEU 
அகில இந்திய மாநாட்டில்  பொதுச்செயலராக 
தோழர்.அபிமன்யு
 மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
நமது தோழமை  வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கான அனுமதி கோரி மத்திய அமைச்சரவைக்கு DOT யால் குறிப்பு அனுப்பப்படவுள்ளது. IDA இணைப்பு விவகாரத்தில் இன்னும் இரு மாதங்கள் பொறுக்கலாம் என்றும் அதன் பின்னும் தாமதம் தொடர்ந்தால் போராட்டத்தில் இறங்கலாம் என்றும் 
AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் மாநில JCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை மீனம்பாக்கம் பயிற்சி மையத்தில் 3 விடுமுறை வீடுகளை 
HOLIDAY HOME திறப்பதற்கு தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
ஊழியர் குடியிருப்புக்களில் தேவையான பராமரிப்பு பணிகளைச் செய்வதற்கு மாநில CGMகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதி நெருக்கடியைக் கணக்கில் கொண்டு செலவிட
 CGMகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
தங்களது மாவட்டம் தாண்டி மற்ற மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கான அனுமதி அந்தந்த  மாவட்ட DGMகளே வழங்கலாம் என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. மாவட்டம் தாண்டி மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் GMகளுக்கே வழங்கப்பட்டிருந்தது. பல மாவட்டங்களில் GMகளே மாவட்டம் தாண்டி இருப்பதால் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
இருப்பினும் MRS மருத்துவ திட்டத்தில்  வழக்கமான
 முருங்கை மர வேதாள (வேதனை) நிலைதான் காணப்படுகின்றது.
------------------------------------------------------------------------------------------------------------
நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளை விற்று விடலாம் அல்லது மூடி விடலாம் என நமது புதிய நிதி மந்திரி தன் திருவாய் மலர்ந்துள்ளார். 
நோயை அழிப்பதல்ல.. நோயாளியை அழிப்பது...
 என்பதுதான்  தற்போதைய அரசின் கொள்கை என்பது தெளிவாகப் புரிகிறது. 
------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment