Monday 3 October 2016

மாவட்டச்செயற்குழுக் கூட்டம் 

தோழர்களே...
மாவட்டத்தில் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் தேங்கியுள்ளன...
ஆண்டுக்கணக்கில் ஊழியர்கள் மாற்றலுக்கு காத்துக்கிடக்கின்றனர்...
IMMUNITY  மாற்றல் கூட அமுல்படுத்தப்படவில்லை...
விளக்கங்களும்... வியாக்கியானங்களும் மட்டுமே கேட்கின்றன...
ஏராளமான சம்பள முரண்பாடுகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன...
அலுவலகங்களும்... தொலைபேசி நிலையங்களும்.. 
அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் உள்ளன...
செம்மையான சேவை தரப்படுவதில்லை...
சுமப்பவர்கள் மீது மேலும் சுமைகள் சுமத்தப்படுகிறது...
சோம்பேறிகள் மேலும் சோம்பேறிகளாக ஆக்கப்படுகிறார்கள்...
எனவே இந்நிலை பற்றி விவாதிக்க 
உரிய வழி சொல்ல... உரிய வழி செல்ல...

பரமக்குடி மாவட்ட மாநாட்டிற்குப்பின்...
வேதனை தந்த வேலூர் மாநாட்டிற்குப்பின்...
07/10/2016 அன்று காரைக்குடியில் 
நமது மாவட்ட செயற்குழு கூடுகிறது...
மாவட்டச்சங்க நிர்வாகிகளும்... கிளைச்செயலர்களும்...
கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்திட 
அன்போடு அழைக்கின்றோம்...

                                               தோழமையுடன் 
பா.லால் பகதூர்                                                                  வெ.மாரி 
மாவட்டத்தலைவர்                                                          மாவட்டச்செயலர் 

No comments:

Post a Comment