Tuesday 4 October 2016


JAO தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு உடனடியாக பயிற்சி வகுப்பு துவக்குவதற்கு ஹைதராபாத்தில் உள்ள NATFM பயிற்சி மையத்திற்கு CORPORTE அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் தற்காலிகப் பதவி உயர்வு அளிப்பதற்கு விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன. 03/11/2016க்குள் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டால் தற்காலிகப் பதவி உயர்வு நடைமுறைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
================================================
BSNL ஊழியர்களுக்கு மாதம் ரூ.200/-க்கு அலைபேசியில் இலவசமாகப் பேசும் வசதி தரப்பட்டிருந்தது. இதில் ரூ.50க்கு தனியார் தொலைபேசியில் பேசுவதற்கு வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி செப்டம்பர் மாதத்திற்குப் பின் தரப்படவில்லை. மேற்கண்ட வசதியை ஊழியர்களுக்கு அளித்ததின் மூலம் BSNL பழுது நீக்கும் சேவை FRS மேம்பட்டுள்ளதா? என CORPORATE அலுவலகம்
 மாநில நிர்வாகங்களைக் கேட்டுள்ளது. 
மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்தபின்பு 
மேற்கண்ட வசதியை தொடருவது பற்றி முடிவெடுக்கப்படும்.
================================================
2014-15ம் ஆண்டிற்கான போனஸ்  ஒப்புதல்  
REMUNERATION COMMITTEE எனப்படும் BSNL வாரிய 
ஊதியக்குழுவிற்கு   அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரம் 
உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
================================================
JTO மற்றும் JAO இலாக்காத்தேர்வுகளில் பல்வேறு தவறுகள் இருந்ததை நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியது. 
தற்போது இப்பிரச்சினை EXPERT COMMITTEE நிபுணர் குழுவிற்கு அனுப்பப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
================================================
பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகளில்  களமிறங்க 
70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் DOTயிடம் அனுமதி கேட்டுள்ளன.

No comments:

Post a Comment