Wednesday 28 June 2017

திறனுக்கேற்ற கூலி – பேச்சுவார்த்தை


ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களது திறனுக்கேற்ற கூலி 
UNSKILLED/SEMI SKILLED/SKILLED என்ற வகையில் வழங்கப்பட வேண்டும் என நமது NFTCL தொடுத்த வழக்கின் முத்தரப்பு இறுதி விசாரணை நாளை 29/06/2017 மாலை 3 மணிக்கு துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையர் முன்பாக நடைபெறுகிறது. 

தமிழ்நாடு மற்றும் சென்னை நிர்வாக அதிகாரிகளும் NFTCL பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.  பல மாவட்டங்களில் இருந்து எல்லோரும் திறனற்றவர்களே என்றும்.. NIL அறிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. படித்தவர்கள் பாவம் செய்வது அரசியலிலும் நிர்வாகத்திலும் சகஜம்தான். இதனை உரிய முறையில் 
தொழிலாளர் ஆணையர் முன்பு எதிர்கொள்வோம். 
வாய்மை நிச்சயம் ஓர் நாள் வெல்லும்.

No comments:

Post a Comment