Friday 21 December 2018


ஓங்குக… தொழிற்சங்க ஒற்றுமை...

மைசூரில் நடந்த…
BSNLEU அகில இந்திய மாநாடு…
தொழிற்சங்க ஒற்றுமை என்னும்….
மதிப்பு மிக்க பதாகையை
மிக உயரத்தில் உயர்த்திப் பிடித்துள்ளது…

BSNLலில் ஏதேனும் ஒரு சங்கம்
50 சதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால்
அந்த ஒரு சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் உண்டு..
வேறு ஏதேனும் ஒரு சங்கம்
49 சத வாக்குகள் பெற்றாலும்
இரண்டாவது சங்க அங்கீகாரம் கிடையாது என்பதுதான்
இன்றுவரை BSNLலில் உள்ள சங்க அங்கீகார தேர்தல் விதிகள்…

மேற்கண்ட விதி முழுமையான தொழிற்சங்க
ஜனநாயகத்திற்கு உகந்த விதியல்ல….
எனவே இந்த விதி மாற்றப்பட வேண்டும் என்பது
நமது சங்கத்தின் தொடர் கோரிக்கை… 

தற்போது…
இந்த விதி மாற்றப்பட வேண்டும் என
வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானத்தை…
BSNLEU சங்கம் தனது மைசூர் அகில இந்தியமாநாட்டில்
ஒருமனதாக ஏகமனதாக இயற்றியுள்ளது…

உறுதியான தொழிற்சங்க ஒற்றுமைக்கும்…
முழுமையான ஜனநாயக செயல்பாட்டிற்கும்..
BSNLலில் நல்வழி பிறந்துள்ளது…

BSNL என்னும் பொதுத்துறை காப்பது…
BSNL ஊழியர் அதிகாரிகள் நலம் காப்பது…
BSNL தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமை காப்பது…

என்ற திசைவழியில்
தீர்க்கமாக தீர்மானம் இயற்றியுள்ள…
BSNLEU சங்கத்திற்கு நமது நல்வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment