Sunday 2 December 2018


ஒருவார காலம் போராட்டம் ஒத்தி வைப்பு

இன்று 02/12/2018 DOT செயலருடன் அனைத்து சங்கத்தலைவர்கள் 
நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில்
 03/12/2018 அன்று துவங்கவிருந்த காலவரையரையற்ற போராட்டம் 10/12/2018 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
நாளை 03/12/2018 இலாக்கா அமைச்சருடன்
 பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதால் போராட்டம்
டிசம்பர்10ந்தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை விவரம்

இன்று 02/12/2018 மதியம் CMDயுடன் அனைத்து சங்கத்தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. DOT சில கோரிக்கைகளின் மீது சாதக நிலைபாடு எடுத்திருப்பதாகவும் அதனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை விலக்கிக்கொள்ளுமாறும் CMD வேண்டுகோள் விடுத்தார். ஆனால் DOTயிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழி இல்லாமல் போராட்டத்தை விலக்கிக் கொள்ள 
இயலாது என AUAB தெளிவுபட எடுத்துரைத்தது.

CMDயுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் 
DOT செயலர், கூடுதல் செயலர் மற்றும் 
DOT மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, 
ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்துதல்...
 மற்றும் 01/01/2017 முதல் ஓய்வூதியத் திருத்தம்
 ஆகிய கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக DOT செயலர் உறுதி அளித்தார். 

ஆயினும் முக்கியக் கோரிக்கையான 
15 சத ஊதிய உயர்வு அளிப்பது பற்றி 
ஊழியர் சங்கங்களுடனான பேச்சுவார்த்தையை 
முழுமைப்படுத்துமாறு BSNL CMDஐ DOT செயலர் கேட்டுக்கொண்டுள்ளார். ஊழியர்களைப்போலவே அதிகாரிகளுக்கும் ஊதிய உயர்வு அளிப்பது பற்றிய DPE வழிகாட்டுதல் விரிவாக விவாதிக்கப்பட்டது.  மேலும் இது பற்றி இலாக்கா அமைச்சருடன் AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு விவாதிப்பதற்கு 03/12/2018 அன்று கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட முன்னேற்றங்களின் அடிப்படையில்...
 03/12/2018 அன்று முதல் துவங்கவிருந்த நாடுதழுவிய காலவரையரையற்ற வேலைநிறுத்தம் 
10/12/2018க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

நமது இறுதிக்கட்டப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் அதிகாரிகளும் ஊழியர்களும், ஓய்வு பெற்ற தோழர்களும், 
ஒப்பந்த ஊழியர்களும் மிகவும் உற்சாகமாக காத்திருந்தனர். 

ஆயினும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் 
நமது அனைத்து சங்க கூட்டமைப்பு சரியான நிலைபாட்டினை 
எடுத்து போராட்டத்தினை ஒருவார காலத்திற்கு 
தள்ளிவைத்துள்ளது பாராட்டுக்குரியது.  

நாளைய பேச்சுவார்த்தையில் 
நமது முக்கிய கோரிக்கையான 
ஊதியமாற்றம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால்...
மேலும் வீச்சுடன்...மேலும் முழுமூச்சுடன்...
மேலும் உரத்தக் கோபத்துடன்... 
டிசம்பர் 10 களம் இறங்குவோம்... 
உரிமை வெல்வோம்… 
காத்திருப்போம் தோழர்களே…
காலமும்... களமும்...காத்திருக்கிறது...

No comments:

Post a Comment