Thursday 7 March 2019


உண்ணாவிரதம் 
பிப்ரவரி மாத சம்பளம்
இன்னும் வழங்கப்படாதது  குறித்தும்
அதிகாரிகள் சங்கத்தலைவர்கள் மீது
தொடுக்கப்படும் பழிவாங்குதல் குறித்தும்…
ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும்…
டெல்லியில் 07/03/2019 அன்று கூடிய
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு விவாதித்தது.

கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளது.

மார்ச் 12 முதல்... 
டெல்லி தலைமையகத்தில் தொடர் உண்ணாவிரதம்…

பிரச்சினைகள் தீராவிடில்…
மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தலைநகர்களில்
தொடர் உண்ணாவிரதம்…

ஏப்ரல் மாதம்...
பிரதமர் அலுவலகம் நோக்கிப் பேரணி…

இதனிடையே…
இன்று மார்ச் 8 வெள்ளிக்கிழமையன்று…
தமிழக CGM அலுவலகம் முன்பாக
அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக
ஒருநாள் அடையாள தர்ணா நடைபெறும்…
என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

தோழர்களே…
ஊதியம் தராமல் உன்மத்தமாக நடந்து கொள்ளும்…
BSNL மற்றும் DOT நிர்வாகங்களை எதிர்த்து
நமது தலைவர்கள் மேற்கொள்ளும்
தொடர் உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்…

பின்குறிப்பு:
தலமட்டங்களில்…
மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்தே
ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும்…
தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால்…
தலைவர்களைத் தொடர்ந்து
தொண்டர்களும் உண்ணாவிரதம்
இருந்திட அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்…

No comments:

Post a Comment