Wednesday 17 February 2021

 கிளை மாநாடுகள்

சிவகங்கை வருவாய் மாவட்டக் கிளை மாநாடு

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக் கிளை மாநாடு


ஒரு காலத்தில் சங்கத்திற்கு புதிய புதிய கிளைகளை

உருவாக்க வேண்டிய கட்டாயம்.

தற்போது அற்ற புலத்து அருநீர்ப்பறவைகள்  போல்

விருப்ப ஓய்விற்குப்பின் ஊழியர்கள் அருகிப்போய்விட்டனர்.

எனவே கிளைகளை இணைக்க வேண்டிய கட்டாயம்.

காரைக்குடியில் 14 கிளைகள் செயல்பட்டன.

இன்று சிவகங்கை வருவாய் மாவட்டத்திற்கு ஒரு கிளை,

இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு கிளை

என இரண்டு கிளைகளாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

இனிமேல்கிளைச்செயலர்கள்

வருவாய் மாவட்டச்செயலர்கள் என அழைக்கப்படுவார்கள்.

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை மாநாடு

26/01/2021 காரைக்குடியில் தோழர் காதர்பாட்சா தலைமையிலும்...

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை மாநாடு

13/02/2021 இராமநாதபுரத்தில்

தோழர்கள் சேதுராஜன் மற்றும் ஜேம்ஸ்வாலண்ட்ராயன் ஆகியோர்

கூட்டுத்தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றன.

---------------------------------------------------------------------

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளையின்

தலைவராக தோழர் முருகன் TT – சிவகங்கை

செயலராக தோழர்.ஆரோக்கியதாஸ் TT – காரைக்குடி

இணைச்செயலராக தோழர் ஜெகன் OS – காரைக்குடி

பொருளராகத் தோழியர் பாண்டியம்மாள் OS – காரைக்குடி

ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

------------------------------------------------------------------

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளையின்

தலைவராக தோழர் தமிழரசன் TT – பரமக்குடி

செயலராக தோழர். சதீஷ் பாலாஜி, JE – இராமநாதபுரம்

இணைச்செயலர்களாக...

தோழர் ஜேம்ஸ் வாலண்ட்ராயன்  TT – இராமேஸ்வரம்

தோழர் மோகன் TT  – பரமக்குடி

பொருளராகத் தோழர்  முருகேசன் TT – இராமநாதபுரம்

ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment