Saturday 24 April 2021

 காற்றுக்கும் வந்ததிங்கே... பஞ்சம்...

சோற்றுக்குப் பஞ்சம் 

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்...       

என்று வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட  

இந்திய தேசத்தில் இன்று

காற்றுக்கும் பஞ்சம்...

 

வடமாநிலங்களில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 

டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 20 பேர் பலி... 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மருத்துவமனையில் 

6 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக செய்தி... 

டெல்லி கங்காராம் மருத்துவமனையில்

ஆக்சிஜன் கிடைக்காமல் 25 நோயாளிகள் இறப்பு...

 

வளமான இந்தியா...

வல்லரசு இந்தியா...

மின்னனு இந்தியா...

மினுமினுக்கும் இந்தியா...

ஒளிமயமான இந்தியா...

ஒரே இந்தியா...

அடச்சீ.... போங்கடா... 


சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்..

வெறும்....

காற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்? 

பாரதி இருந்திருந்தால்...

ஆளுகின்ற அசிங்கங்களை....

அறம்பாடி அழித்திருப்பான்....

பேடிகளாய்..

நாங்கள் பிறந்து விட்டோம்...

என் செய்வோம்?... ஏது உரைப்போம்?...

No comments:

Post a Comment