Tuesday 27 April 2021

 பேய்கள் அரசாண்டால்...


இந்தியாவில்...

ஒரே நாளில் 3,32,730 பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகில் இதுவே மிகப்பெரிய சாதனை.....வேதனை...

இன்று வரை 1 கோடியே 60 இலட்சம் பேர் பாதிப்பு....

இதுவும் சாதனை...

இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 2000 பேர் இறந்து கொண்டிருக்கின்றார்கள்...

இதுவும் சாதனைதான்...

இறப்பவர்களை எரிப்பதற்கு கூட இடுகாடு இங்கில்லை...

இதுவும் சாதனைதான்...

உண்ண உணவு...

உடுக்க உடை...

இருக்க இடம்...

எரிக்க சுடுகாடு...

இது எதுவுமே இல்லாத தேசமாக

மாறிப்போனது வக்கற்ற இந்திய தேசம்...

கைதட்டி கொரோனாவை விரட்டினார்கள்...

இன்று உலகமே...

கைகொட்டி சிரிக்கின்றது....

விளக்கேற்றி கொரோனாவை விரட்டினார்கள்...

இன்று இடுகாட்டில்...

விறகேற்றி பிணங்களை எரிக்கின்றார்கள்...

கொரோனா மருந்து ரெம்டெசிவிர்

நாலாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாக உயர்வு...

பேய்கள் அரசாண்டால்...

பணம் தின்னும் தனியார்கள்...

பேய்கள் அரசாண்டால்..

பிணம் தின்னும் இடுகாடுகள்...

No comments:

Post a Comment