Thursday 16 September 2021

சுயமரியாதையே சுகவாழ்வு...

 

செப்டம்பர் – 17

சமூக நீதி நாள்...

தந்தைப் பெரியார் பிறந்த நாள்

----------------------------------------

பெரியார் பிறந்தார்...

சுயமரியாதை பிறந்தது...

குருடர்கள் விழித்தார்கள்...

செவிடர்கள் கேட்டார்கள்...

முடவர்கள் நடந்தார்கள்...

கேள்விக்குறி போல் வளைந்து நெளிந்தவன்...

கேள்விக்கணைகளைத் தொடுத்தான்...

இடுப்புத்துண்டை  முண்டாசாக்கினான்...

மடிச்சுக் கட்டினான்  நாலு முழ வேட்டியை...

காலுக்கு மாட்டிக்கொண்டான் காலணியை...

கம்பீரமாய் அணிந்தான் காலர் வைத்த சட்டையை ...

குடை விரித்தான் வெய்யிலுக்கும்... மழைக்கும்...

மழைக்காக கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவன்...

மளமளவென்று பட்டங்கள் பெற்றான்....

குலத்தொழிலே கதி என்று இருந்தவன்...

அரசுப்பணியில் அதிகாரம் கொண்டான்...

கும்பிட்டே வாழ்ந்த மனிதன்...

பிறர் கும்பிடும் நிலைக்கு உயர்ந்தான்...

தமிழனுக்கு இரண்டு தந்தைகள்...

பெற்ற தந்தையும்...

பெரியார் என்னும்

உற்ற தந்தையும்....

வாழ்க... பெரியார்....

வளர்க... அவர் எழுப்பிய சமூக நீதி...

-----------------------------------------------------------------------

தந்தைப் பெரியார் பிறந்த தின விழா...

சமூக நீதி உறுதிமொழி ஏற்பு...

17/09/2021 – வெள்ளிக்கிழமை – காலை 09.30 மணி

தந்தைப் பெரியார் சிலை முன்பு 

தல்லாகுளம் – மதுரை.

தோழர்களே.... வருக...

No comments:

Post a Comment