Sunday 10 November 2013

பாரதியின் பாதம் பட்ட 
பெருமை சொல்வோம்..

1919 நவம்பர் 9,10,11 
செட்டிநாடு சிலிர்த்தது..
காரைக்குடி களித்தது...
கம்பன் உறங்கும் மண்ணில்..
அந்த மூன்று திருநாட்கள்..
காலடி பதித்தான் பாரதி..

இந்து மதாபிமான சங்கத்தில் தங்கி 
தேசாபிமான உரைநிகழ்த்தி..
கவி பாடி சங்கத்தின் புகழ் பாடி 
பாரதி வந்து சென்ற  நாட்களை 
வாழ்நாளெல்லாம் கொண்டாடும் 
செட்டிநாட்டவர் இவ்வாண்டும் 
சிறப்புடனே கொண்டாடி மகிழ்ந்தனர்..

பாரதியின் எள்ளுப்பேரன் 
நிரஞ்சன் பாரதியைக்கண்டு.. 
நிஜத்தில் பாரதியைக்கண்டது போல்..
நீங்கா மகிழ்வு கொண்டனர்.. 
தமிழ்மேல் 
நீங்காப்பற்று கொண்ட 
தமிழ் மேன்மக்கள்..

தோழர். முருகன் தலைமையில் 
தோழர்கள் பங்கேற்க..
பாரதியின் 
வருகை நாள் கொண்டாட்டம்...
வழக்கத்தினும் சிறப்பாய்..நடந்தேறியது..
பாரதியின் பாதம் பட்ட பெருமை சொல்வோம்..
பெருமைமிக்க அவர் பாதம் பதித்த வழி செல்வோம்..

(மேலே கண்ட பாரதியின் உண்மை நிழற்படம் 
காரைக்குடியில்  11/11/1919ல் எடுக்கப்பட்டது)

No comments:

Post a Comment