Sunday 17 November 2013

கப்பலோட்டிய தமிழன் 
கப்பம் கட்டி பிழைத்த காலத்தில் 
கப்பலோட்டி உழைத்தவன்..
வெள்ளையனைக் 
கப்பலேற்றத்  துணிந்தவன்..
தேச மானத்தைக்
 கரை சேர்க்கப்பிறந்தவன்..
சொத்தை துறந்தவன்.. 
சுகத்தை மறந்தவன்.. 
செக்கை இழுத்தவன்.. 
செம்மலாய் வாழ்ந்தவன்.. 
தியாகத்திருவுருவம் 
 சிதம்பரம் 
புகழ் பாடுவோம்..
(நவம்பர் 18 செக்கிழுத்த செம்மல் நினைவுநாள்)

No comments:

Post a Comment