Friday 22 November 2013

செய்திகள் 

JCM தேசியக்குழு கூட்டம் 23/12/2013 அன்று 
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கான 
78.2 சத IDA இணைப்பு வழங்குவது சம்பந்தமாக சில விளக்கங்களை 
ஓய்வூதிய இலாக்கா DOTயிடம் கேட்டுள்ளது.

ITS அதிகாரிகள் BSNLலில் இணைவது சம்பந்தமான
 வழக்கு விசாரணை 17/01/2014க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்க உழியர் தரப்பில் NFTE சார்பில் தோழர். இஸ்லாம் அவர்களும், BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் பிரதிநிதிகளாக  நியமிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த குழுவில் JCMல் உள்ளது போல் தங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கேட்டு BSNLEU சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. 

TTA கேடருக்கான ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்திட NFTE மற்றும் BSNLEU சங்கங்களிடம் BSNL நிர்வாகம் கருத்து கேட்டுள்ளது.

சுங்கம் மற்றும் கலால் வரித்துறையில் கேடர் சீரமைப்பை அமுல்படுத்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 
60 சதம் இரண்டாம் பிரிவு GROUP B அதிகாரிகள்
 முதல் பிரிவு GROUP A அதிகாரிகளாக மேல்நிலை பெறுவர்.

வீட்டு வாடகை மூலம் வருமான வரி விலக்கு பெறுபவர்கள் 
ஆண்டு  வாடகை ஒரு  லட்சத்திற்கு மேல் வாடகை கொடுத்தால் 
(மாதம் ரூ.8333/க்கும் அதிகமாய்) வீட்டு உரிமையாளரின் 
வருமான வரிக்கணக்கு எண்ணை PAN சமர்ப்பிக்க வேண்டும் 
என உத்திரவிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண். -
    திருவள்ளுவா"

    " தன் சமூகத்தின் இன்னல்துடைக்க இரவு பகல் பாராது
    தொடர்ச்சியாய் உழைப்பவனே தலைவன்.
    புரட்சியாளர் அம்பேதகர்"

    தொழிலாளர்களின் துயர் துடைக்க தன் துன்பங்களையும் மறந்து தோழர்களின் சிந்தனைகள் மட்டுமே வாழ்க்கையாய் பயணிக்கும் அனைத்து தோழர்களுக்கும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் NFTE ன் சம்மேளன தின வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுடன் காரைக்குடி மாவட்ட தோழர்கள்

    ReplyDelete