Sunday 22 November 2015

ஒப்பந்த ஊழியர் போராட்டம் 

ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தீர்விற்காக 
24/11/2015 சம்மேளன தினத்தன்று காரைக்குடியில்
 தோழர்.ஆர்.கே.., அவர்கள் தலைமையில் 
உரிமை மீட்பு உண்ணாவிரதத்திற்கு அறிவிப்பு செய்திருந்தோம். 

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை சம்பந்தமாக 
மாநில நிர்வாக அதிகாரிகளை சந்தித்ததின் அடிப்படையிலும்..
மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரிலும்..
 இன்று 23/11/2015 காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் 
பிரச்சினைகளுக்கு தீர்வு பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

ஒப்பந்த ஊழியர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல...
அவர்கள் நம் வீட்டுப்பிள்ளைகளே.. 
என்ற மனிதநேய உணர்வோடு 
பிரச்சினைகள் அலசப்படும் போது.. 
அவர்களின் கண்ணீரும் துடைக்கப்படும்.

நியாயங்களும்... தர்மங்களுமே... சட்டமாகின்றன...
ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் நியாயங்கள்..
 நிலை நிறுத்தப்படும் என நம்புகிறோம். 

No comments:

Post a Comment