Thursday 26 November 2015

திப்பு மிக்க... மன்னவன் திப்பு...

உலக வரலாறு ஒரு சிலரையே மாவீரன் என்கிறது...
அந்த வரிசையில்...வரலாறு போற்றும்
மதிப்பு மிக்க மன்னவன் மாவீரன் திப்பு ஆவான்...
 
தேசத்தந்தையைக்கூட  அவமதிக்கும் இந்த தேசத்தில்...
ஒரு இஸ்லாம் மன்னனை.. இந்திய தேசத்தின் மதவாதிகள் 
இன்று இகழ்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை...
 
ஆனால்.. ஒரு அரும்பெரும் மன்னனின்.. மனிதனின்
அரிய பண்புகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்...
 
ஔரங்கசீப்  50 ஆண்டுகள் ஆட்சி செய்தார்...
திப்பு 50 ஆண்டுகள் கூட  வாழவில்லை...
ஆனாலும்  1000 ஆண்டுகளில் யாரும் செய்யாத 
அரிய பணிகளைத்தன் ஆட்சியில் செய்தார்...
 
பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும்..
எதிரியாக இருந்தாலும்...
அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்பது
திப்புவின் ஆழமான கொள்கை...
பிணையக்கைதிகளிடம் தவறுதலாக நடக்க முற்பட்ட 
தளபதி மக்பூல்கானை தானே சுட்டுக் கொன்றார்...
 
வெள்ளையரை வாளும்.. வேலும் கொண்டு
எதிர்க்க இயலாது என்பதை உணர்ந்து 
நவீன பீரங்கிகளையும்.. துப்பாக்கிகளையும்...
ஏவுகணைகளையும் உருவாக்கினார்..
திப்புவின் ஏவுகணை தொழில் நுட்பம்
மேலை நாட்டவர்களுக்கே பாடம் சொன்னது...
 
திப்புவின் கஜானா காலியாகி
பொருளாதார பற்றாக்குறை வந்தபோது...
மது விற்பனைக்கு அனுமதி அளிக்க 
திப்புவின் மந்திரி ஆலோசனை சொன்னார்...
"கஜானாவை விட மக்களின் நலனே முக்கியம்..  
ழுக்கமே பிரதானம்...என்று கூறி 
மது விற்பனைக்கு மறுப்பு தெரிவித்தார்...
இன்றைய அம்மாக்கள் உணர வேண்டிய செய்தி இது...
 
வெள்ளையர்கள் கஞ்சா பயிரிட அனுமதி அளித்த போது 
திப்பு தனது ஆட்சியில் கஞ்சா பயிரிட தடை விதித்தார்...
 
அனாதையான இளம்பெண்களை கோவிலுக்கு
தேவதாசியாக்கும் முறைக்கு தடை விதித்தார்...

தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் முறையைத் தடை செய்தார்.
அரசாகவே இருந்தாலும் கூலி கொடுக்காமல்
யாரிடமும் வேலை வாங்கக் கூடாது என ஆணையிட்டார்...
வரதட்சிணைக்கு எதிராக சட்டம் இயற்றினார்...
கீழ் சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற
கொடுமையை மாற்றி  அவர்களை மேலாடை அணிய வைத்தார்..

கோவில்களுக்கும்.. அந்தணர் மடங்களுக்கும்... மசூதிகளுக்கும் 
ஆண்டு தோறும் நன்கொடை வழங்கினார்...

இராணுவத்தில் பணிபுரிவோருக்கு இலவச நிலம் வழங்கினார்...
தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு சொந்தமாக நிலம் கொடுத்தார்...
உழுபவருக்கு நிலத்தை சொந்தமாக்கினார்...

வெள்ளையரை போரில் மட்டும் எதிர் கொள்ளாது...
வணிகத்திலும் எதிர் கொண்டார்...

14 இடங்களில் வணிக மையங்கள் அமைத்தார்..
20 வணிகக்கப்பல்களை அலைகடலில் மிதக்க விட்டார்..
துருக்கி வரை துணிந்து சென்று  வணிகம் செய்தார்..

பணப்பயிர் உற்பத்தியை ஊக்குவித்தார்..
பட்டுப்பூச்சி வளர்ப்பை உண்டாக்கினார்..
பெங்களூரில் லால்பாக் என்னும் தாவரவியல் பூங்கா உருவாக்கினார்...
கிருஷ்ணசாகர் அணைக்கட்டிற்கு அடிக்கல் நாட்டினார்...

விவசாயிகள் தவறு செய்தால் தண்டனை கொடுக்காமல் 
மல்பெரி மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என
தண்டனை முறையை மாற்றினார்.

படையெடுப்பின் போது எதிரி நாட்டு மக்களிடம்
இரக்கமுடன் நடக்க உத்திரவிட்டார்..
குழந்தைகளுக்கும்.. முதியவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்தார்...
விவசாயிகளுக்கும் இராணுவப் பயிற்சி அளித்தார்..

இவ்வாறாக அவரது சாதனைகளை நாம் பட்டியல் இட்டால்
அது அனுமன் வாலை விட அதிகம் நீளும்...

இவை யாவற்றுக்கும் மேலாக..
மனித நேயத்தை விதைத்தார்...
மத நேயத்தை போற்றினார்..

சிவகங்கையின் வேலு நாச்சியாரைத்தன்
சொந்த சகோதரியாகப் போற்றினார்..
ஆயிரம் படை வீரர்களும்.. பீரங்கிகளும் அளித்து
வெள்ளையனை விரட்டிட உதவினார்...
வேலு நாச்சியார் அடைக்கலமாக திண்டுக்கல்லில் இருந்த போது..
அவரது குல தெய்வமான
இராஜ இராஜேஸ்வரியை வழிபட முடியாமல் வருந்திய போது..
திண்டுக்கல் கோட்டையிலே
இராஜ இராஜேஸ்வரிக்கு கோவில் அமைத்து 
வேலு நாச்சியாரின் பக்திக்கு பாதை அமைத்தார்..

மருது சகோதரர்கள் மதி மயங்கி..
வெள்ளையனிடம்  நட்பு கொண்டபோது..
வெள்ளையனின் நண்பர்கள் எனக்கு எதிரிகள் என்று அறிவித்து 
மருது சகோதரர்களின் மயக்கத்தை விரட்டினார்...

ஆற்காடு நவாபு.. ஹைதராபாத் நிஜாம்..
தொண்டைமான்.. திருவிதாங்கூர் மன்னர்   போன்ற
துரோகிகளால்  காட்டிக் கொடுக்கப்பட்டு...
தனியொரு மனிதனாகவே போராடி வீழ்ந்தார்...

இன்று அவரது வாரிசுகள்
ரிக்ஸா ஓட்டியும்.. டீக்கடை நடத்தியும் 
வாழ்க்கை நடத்துகின்றார்கள்..

அவரது புரட்சிகர ஆட்சியின் சாதனைகளை 
நன்றியோடு நினைவு கூற வேண்டிய இந்திய சமுதாயம் 
மதம் என்னும் தோல் போர்த்தி..
அவரை இந்துக்களுக்கு எதிரானவராக சித்தரிப்பது
கொடுமையிலும் கொடுமை...

வரலாற்றைப் புரட்டும் பாவிகளின்
காவி முகங்களை கிழிப்போம்...
மனித நேயத்தோடு வாழ்ந்து மறைந்த
மாவீரன்களை மதிப்போம்...

No comments:

Post a Comment