Monday 30 November 2015

கருத்தினில் நிறைந்த.. கடலூர் 
மாவட்டசெயலர்கள் கூட்டம்..

ஆழி சூழ் கடலூரிலே..
தமிழ் மாநில மாவட்டச்செயலர்கள் கூட்டம்
மாநிலத்தலைவர் தோழர்.இலட்சம் அவர்கள் தலைமையில்..
மாநில பொறுப்புச்செயலர் தோழர்.முரளி...
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி..
சம்மேளனச்செயலர்கள்  
தோழர்கள்.ஜெயராமன்,  SS.கோபாலகிருஷ்ணன்...
அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர்.காமராஜ்,
மாநிலப்பொருளர் தோழர்.அசோக்ராஜ்,
மூத்த தலைவர் தோழர்.சேது ஆகியோர் பங்கேற்பில்
27/11/2015 அன்று சிறப்புடன் நடைபெற்றது.

அவுரங்கபாத் மத்திய செயற்குழு முடிவுகள் விளக்கப்பட்டன.
வேலூர் தமிழ் மாநில மாநாட்டிற்கு திட்டமிடப்பட்டது.
எதிர்வரும் ஊழியர் சங்கத்தேர்தலை
எதிர்கொள்ள.. தொடர்ந்து வெல்ல.. உறுதி எடுக்கப்பட்டது.

மழையில் மிதந்தாலும்..
புயலில் தவித்தாலும்...
வெயிலில் வாடினாலும்...
சங்கம் இடும் கட்டளையை 
சளைக்காமல்.. சலிக்காமல்...செய்து முடிக்கும்..
தோழர்களின்  உணர்வுகளை முடுக்கும்...
கடலூர் மாவட்டச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment