Wednesday 30 November 2016

எதிர்காலம் 
BHAVISHYA pension scheme க்கான பட முடிவு
BHAVISHYA
Pension Sanction and  Payment Tracking System

எதிர்காலம் 
ஓய்வூதியம் மற்றும் பட்டுவாடா கண்காணிப்பு அமைப்பு 

மத்திய அரசில்  ஓய்வு பெறும் தோழர்கள் படும் துன்பங்களைக் கணக்கில் கொண்டு, அவர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் விரைந்து கிடைத்திடவும்... 
அவர்களது ஓய்வூதிய விண்ணப்பங்கள் எந்த மேஜையில் ஓய்வெடுக்கிறது  என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்ளவும்...

 ஓய்வூதியர்கள் நலத்துறை "BHAVISHYA" என்ற ONLINE திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்கான உத்திரவை  ஓய்வூதியர் நலத்துறை 29/11/2016 அன்று வெளியிட்டுள்ளது. இந்த முறை ஓராண்டுக்கு முன்பே  டெல்லியில்  அனைத்து துறைகளின் 
மத்திய செயலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு  
வெற்றிகரமாக  செயல்பட்டு  வருவது  குறிப்பிடத்தக்கது. 

மின்னணுமயமான  இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதிய விண்ணப்பத்தின் நிலையை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். நாட்டிலுள்ள ஏறத்தாழ 3000 சம்பளப்பட்டுவாடா அதிகாரிகள் ONLINE மூலம் இணைக்கப்படுவார்கள். 
ஆனால் இத்திட்டம் அஞ்சல்,தொலைத்தொடர்பு மற்றும் 
இரயில்வே துறைக்கு பொருந்தாது என தெரிகிறது. 

இங்கும் அமுல்படுத்தப்பட்டால் ஓய்வூதியர்கள்
 விரைவில் தங்களது ஓய்வூதியப்பலன்களை அடையவும்... 
எங்கு... யாரிடம்... எதனால்  தாமதம் 
என்பதை அறிந்து கொள்ளவும் இயலும். 

ஆனாலும் மற்ற அனைத்து துறைகளையும் ஒப்பிடுகையில் தொலைத்தொடர்பில் ஓய்வூதியப்பலன்கள் உடனடியாகப் பட்டுவாடா செய்யப்படுவது  குறிப்பிடத்தக்கது... போற்றத்தக்கது...

No comments:

Post a Comment