Monday 28 November 2016

களை  கட்டிய  இராமநாதபுரம் கிளை மாநாடு...

பொதுவுடமைப்புரட்சியின் நூற்றாண்டு விழா 
63வது  சம்மேளன தின விழா 
சங்கத்தில் இணைப்பு விழா 
பணி நிறைவு பாராட்டு விழா 
கிளை மாநாடு 
என 24/11/2016   NFPTE 63வது  சம்மேளன தினத்திலே 
 களை கட்டியது இராமநாதபுரம். 

தோழியர் ஜீவா சங்கக்கொடியேற்றினார் 
மூத்த தோழர் காந்தி தலைமையேற்றார்...
கிளைச்செயலர்  இராமமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்...
ஓய்வூதியர்கள் சங்க மாநில உதவிச்செயலர்
தோழர்.நாகேஸ்வரன் அவர்கள்  
சங்க வரலாறை... சாதனைகளை அருமையாகப் படம்பிடித்தார்...
ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன் 
பரமக்குடியின் மூத்த தோழர்கள் இராமசாமி, கணேசன் 
இராமேஸ்வரம் கிளைச்செயலர் தோழர்.இராஜன் 
மூத்த தோழர் இராமேஸ்வரம் இராமமூர்த்தி...
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.முருகன் 
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.தமிழ்மாறன் 
மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் உரையாற்றினர்...

கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் 
தோழர்.அமலநாதன் - OS 

செயலர்  
தோழர்.தங்கராஜ் - TT 

பொருளர் 
தோழர்.கோபிநாதன் - JE

வழி நடத்தும் புதிய கிளைச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

சூதும்... வாதும் அறியாதது  இராமநாதபுரம் கிளை...
வேகமும்... கோபமும் நிறைந்தது இராமநாதபுரம் கிளை...
தோள்வலி மிக்கது இராமநாதபுரம் கிளை...
பல்லக்குகளை தூக்கி தூக்கி...
தோள்வலி கண்டது  இராமநாதபுரம் கிளை... 
அதனை வளர்த்த தலைவர்கள் 
வேலுச்சாமி... சவுக்கத் அலி வழியில்... 
இன்று போல் என்றும் உணர்வுடன் வளர வாழ்த்துகின்றோம்....

No comments:

Post a Comment