Thursday 3 November 2016

பரந்து கெடுக... பாரத தேசம் 
ஒரு பதவி... ஒரு ஓய்வூதிய போராட்டத்தில் உயிர் நீத்த
முன்னாள் இராணுவ வீரர் இராம் கிஷன் கிரேவால் 

போர்க்களத்தில் போகாத உயிர் 
போராட்டக்களத்தில் போய் விட்டது...

இராணுவ வீரர்களின்... 
ஒரு பதவி... ஒரு  ஓய்வூதியம்...
ONE RANK... ONE PENSION... திட்டத்தில் 
தங்களை ஏமாற்றும் மத்திய அரசை எதிர்த்து 
போராட்டக் களம் கண்ட முன்னாள் இராணுவ வீரர் 
இராம் கிஷன் கிரேவால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்...

பாதுகாப்புத்துறையால்... 
இந்த தேசத்தைப் பாதுகாத்த ஒரு மனிதனை 
உயிருடன் பாதுகாக்க  இயலவில்லை...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...
ஒரு பதவி... ஒரு  ஓய்வூதியம் திட்டத்தை 
அமுல்படுத்துவோம் என்று சொன்ன ஆட்சியாளர்களால்...
பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பார்ப்பதற்கு கூட நேரமில்லை...

அவரது சடலத்தைப் பார்ப்பதற்கு கூட 
யாரையும் அனுமதிக்கவில்லை...
உச்சக்கட்டமாக அவரது உறவினர்களையே 
காவல்துறை கைது செய்துள்ளது...
அரசின் இந்தப்போக்கு அழிவிற்கான பாதையாகும்...

உரிமைப் போராட்டத்தில் உயிர் கொடுத்த 
முன்னாள் இராணுவ வீரருக்கு நமது செவ்வணக்கங்கள்...

பாரத தேசம் பழம் பெரும் தேசம்...
நீரதன் புதல்வர்... நினைவகற்றாதீர்...
யார் சொன்னது? 

நாம் சொல்கிறோம்...
சொந்தப் புதல்வர்களின் கழுத்தறுக்கும்..
பாரத தேசம்... பாதக தேசம்...
பரந்து கெடுக பாரத தேசம்...

No comments:

Post a Comment