Monday 16 January 2017

க்கள் தலைவன் 
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்
M.G.R.,
மூன்றெழுத்து மந்திரம்...
பாட்டாளிகளின் வழித்தடம்...
உழைப்பாளிகளின் ஒத்தடம்...

இலங்கையில் பிறந்தார்...
குடந்தையில் வளர்ந்தார்...
தமிழக  மனங்களில் வாழ்ந்தார்...

அரிதாரத்திற்கும்...
அவர் தாரத்திற்கும்... அரியணை தந்தார்..

சத்துணவு தந்தார்...
பிற்பட்டோருக்கு..சம பங்கு தந்தார்... 

பொன்மனம் கொண்டார்...
பொருள் கொடுத்துச் சிவந்தார்...

இலையாட்சியை...
நிலையாட்சியாக்கினார்...

M.G.R.,
பிம்ப உலகின்  அரசன்...
அரசியல் உலகின் ஆசான்...
வறுமை உலகின்  தெய்வம்...

சமத்துவம் சொன்ன  ராஜாஜி..
அரிதாரம் பூசிய அண்ணாத்துரை...
கவர்ச்சி கொண்ட காமராஜ்...

மக்கள் திலகம்... M.G.R.,
பொன்மனச்செம்மல்...M.G.R.,
ஏழைகளின் இதயக்கனி...M.G.R.,

மூன்றெழுத்திலே... 
தமிழகத்தின் மூச்சிருக்கும்...
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் 
ஆயிரத்தில் ஒருவன் 
M.G.R., பேச்சிருக்கும்...

17/01/2017
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்...
அவர்களின் 
நூற்றாண்டு  தினத்தில் 
அவர் நினைவைப் போற்றுவோம்...

No comments:

Post a Comment