Thursday 9 March 2017

தரை மேல் பிறக்க வைத்தான்…
கண்ணீரில் மிதக்க வைத்தான்…
துண்டு மீனுக்காக சென்று... குண்டுக்கு இரையான பிரிட்ஜோ..

இருபத்திரண்டே வயதான
இளைஞன் பிரிட்ஜோ…
இலங்கை கடற்படையின்
இரக்கமற்ற செயலால்
இன்னுயிர் நீத்துள்ளான்…
இலங்கை ஒரு சுண்டைக்காய்..
இராமநாதபுரம் மாவட்டம் திரண்டாலே…
இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்…
இந்திய அரசோ.. தமிழக அரசோ…
இன்னும் வாய் திறக்கவில்லை…
இரக்கமற்றவர்களின் செயல் இது…
இதயமற்றவர்களின் செயல் இது…
இரங்கல் விடுப்பது மட்டும்தான்
இந்திய அரசியல்வாதிகளால்..
இப்போதைக்கு முடிந்த செயல்…
இராவணன் கொடுமை எதிர்த்து
இராமனின் படையாள் அனுமன்
இலங்கையை எரித்தான்…
இன்றைய ஆள்வோர்களும்…
இராமனின் படையாட்கள்தான்…
இலங்கையை எரிப்பார்களா? எதிர்ப்பார்களா?
இதுவே இந்திய மக்களின்..
இன்றைய எதிர்பார்ப்பு...

No comments:

Post a Comment