Monday 3 February 2014

செய்திகள் 

31/01/2014 அன்று கூடிய BSNL மறுசீரமைப்பிற்கான அமைச்சர்கள் குழு 
BSNL  மற்றும் MTNL  நிறுவனங்களுக்கு ஏறத்தாழ 8500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது. 
குறைந்த வட்டியில் பத்தாண்டு கால திருப்புத்தவணையில் இந்த கடன் வழங்கப்படும்.  ஊழியர்களின் சம்பள நிதிச்சுமையை எதிர்கொள்ள 
இந்த கடன்தொகை பயன்படுத்தப்படும். 

JTO  ஆளெடுப்பு விதிகளில் கீழ்க்கண்ட மாற்றங்களை 
நமது சங்கம் கோரியுள்ளது.

7 ஆண்டு சேவைத்தகுதி என்பது 3 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும்.
TM/SR.TOA  பதவிகளிலும் செய்த சேவையை 
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
TM/SR.TOA  கேடர்களுக்கு தனியாக 10 சத பங்கீடு வழங்க வேண்டும்.
JTO தகுதித்தேர்வில் (SCREENING TEST ) தேர்ச்சியுற்ற அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
அறிவியல் பட்டம் பெற்ற இலாக்கா ஊழியர்கள் 
தேர்வெழுத வகை செய்ய வேண்டும்.
இலாக்கா ஊழியர்கள் நேரடிப்போட்டியில் பங்கேற்கும்போது  
வயது வரம்பு 10 ஆண்டுகள் வரை தளர்த்தப்பட வேண்டும்.

01/02/2014 அன்று காரைக்குடியில் AIBSNLPWA  
ஒய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்கள்.அருணாச்சலம், நாகேஸ்வரன்,அண்ணாமலை,முருகன்,பாண்டித்துரை ஆகியோர் அடங்கிய குழு நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களை சந்தித்து 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஊழியர்களின் பதவி பெயர்மாற்றக்குழுவில் (DESIGNATION  COMMITTEE)
NFTE  சார்பாக தோழர்கள் சந்தேஷ்வர்சிங்  மற்றும் மகாவீர்சிங் ஆகியோர் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள்.

No comments:

Post a Comment