Thursday 13 February 2014

பாலு கேந்திரா 

பசுமையைப் படம் பிடித்தவன் 
இருளில் இலக்கணம் படைத்தவன் 

கதை சொன்ன காமிராக்களை 
கவிதை சொல்ல வைத்தவன் 

ஆந்திரத்து அழுக்குத்துணியை 
தமிழகத்து சில்க் ஆக்கியவன் 

மூன்றாம்  பிறையில் 
முத்திரை பதித்தவன் 

நித்திரை கெடுத்த 
வீடு தந்தவன் 

தரமிக்க படைப்புக்கள் தந்தவன் 
தலைமுறைகளைப்  படைத்தவன் 

கலைஞர்கள் மரிப்பதில்லை..
தினம் தினம் திரையில் பிறப்பவர்கள்..

அழியாத கலைஞனுக்கு அஞ்சலி எதற்கு?

No comments:

Post a Comment