Monday 24 February 2014

பயன்மிகு பயிற்சிப் பட்டறை 

தோழர்களே..
வேலூரில் 22/02/2014 அன்று JCM  உறுப்பினர்களுக்கான 
பயிற்சிப்பட்டறை உற்சாகமுடன் நடைபெற்றது. 
தோழர். லட்சம் தலைமையேற்று நடத்தினார்.
தோழர்கள்.ஆர்.கே., முத்தியாலு, தமிழ்மணி, ஆகியோர் தங்களது கடந்த கால JCM அனுபவங்களையும் வருங்காலத்தில் நாம் செல்ல வேண்டிய வழிகள் பற்றியும் சிறப்புடன் எடுத்துரைத்தனர். 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது, 
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். 
வேலூர் பொதுமேலாளர் நிர்வாகத்திற்கே உரிய வியாபார மொழியில் தனது வாழ்த்துரையை வழங்கினார். 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி JCMன் வரலாறு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இன்றுள்ள சூழலில் ஒற்றுமையுடன் ஊழியர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
நினைவில் நின்ற வேலூர் தோழர்களின் காரசார  உணவு..
அதனினும் விட 
ஜார்க்கண்ட் மாநிலச்செயலர். தோழர்.மகாவீர்சிங் அவர்களின் காரசாரமான உரை பட்டறையின் சிறப்பம்சங்களாக அமைந்தது. 
காரைக்குடியில் இருந்து 8 தோழர்களும் , மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான  தோழர்களும் கலந்து கொண்டனர். 
பயிற்சிப்பட்டறை தந்த தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment