Friday 25 April 2014

ஆகப்பெரும் அதிகாரிகளுக்கான 
முழு உடல் பரிசோதனை திட்டம் 
EXECUTIVE HEALTH CHECK UP SCHEME 

BSNLலில் பணி புரியும் பெரிய அதிகாரிகளுக்கான
 முழு உடல் பரிசோதனைத்திட்டம் மேலும் ஓராண்டிற்கு 
01/04/2014 முதல் 31/03/2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்படி..

50 முதல் 55 வயது வரையிலான பெரிய அதிகாரிகள்
(SAG LEVEL AND ABOVE) ஆண்டுதோறும் தனது மனைவியுடன் 
முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

55 வயதை தாண்டியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பரிசோதனை செலவு ரூ.3500/= வரை அனுமதிக்கப்படும்.

55 வயதான PGM/CGM மற்றும்  அதற்கு மேல் பதவியில்  உள்ளவர்கள்  இருதய ஆய்வு மற்றும் உடல் நல  ஆய்வு தனது மனைவியுடன்  ஆண்டுதோறும் மேற்கொள்ளலாம். 
இதற்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 10000/= வரை அனுமதிக்கப்படும்.

அதெல்லாம் சரி..
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இந்த சலுகைகள் 
மாடாய் உழைத்து மாதந்தோறும் மரிக்கும் ஊழியருக்கு உண்டா? எனில்..
இல்லை என்பதே.. பதிலாகின்றது...

45 வயதைக்கடந்தால் ஆயுளில் ஒரே ஒரு முறை 
அதுவும் நலத்திட்ட அடிப்படையில் ரூ.1500 வரை/= 
முழு உடல் பரிசோதனை அனுமதிக்கப்படுகின்றது. 
ஊருக்கு ஊர் இந்த தொகை மாறுபடும். மனைவிக்கு கிடையாது. 

உடல் நோகாமல் உழைக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இத்திட்டம்..
உடல் நோக உழைக்கும் தொழிலாளிக்கு வழங்கப்படாதது..ஏன்..?
உயிரும் உடலும் அதிகாரிகளுக்கு மட்டும் வெல்லமா..?
இந்த தேசம் வலுத்தவர்கள் மட்டுமே வாழப்பிறந்த தேசமா?..
கேள்விக்குறி போல் முதுகு வளைத்து உழைப்பவனின் கேள்வி இதுவே...

No comments:

Post a Comment