Thursday 3 April 2014

TMTCLU
உரிமைக்குரல் எழுப்பிய
ஒப்பந்த ஊழியர் மாநாடு..

"வல்லான் வகுத்த தனியுடமை
நீங்கி.. வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"
என்று பாடிய கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்திலே..
இந்த தேசத்தின் நாசகாரக்கொள்கையால்..
கூலியாய் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரின்
உணர்வு மிக்க மாநாடு காரைக்குடியில் துடிப்புடன் நடந்தேறியது.

தோழர். ஆர்.கே.. தலைமையேற்க
பொதுச்செயலர் தமிழ்மணி அறிக்கை அளிக்க
தோழர். பட்டாபி ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை பட்டியலிட.
தோழர்.மூர்த்தி இன்றைய இழிநிலை அகற்ற ஊழியர்களை திரட்ட..
பொருளர். தோழர்.முரளி பொருள் பொதிந்த உரை நிகழ்த்த..
தோழியர்.மீனாள் சேதுராமன் தலமட்டப்போராட்டங்களை விளக்கிட..
தோழர்.இரத்தினம் இரத்தினச்சுருக்கமாய் ஊழியரது பாடுகளை கூறிட
தோழர்.மணவழகன் மனம் குமுறும் ஊழியர் துன்பங்களை பேசிட....
நமது வழிகாட்டி தோழர்.சேது
மாநில உதவித்தலைவர் தோழர்.லட்சம்
மாநிலச்சங்க நிர்வாகிகள் , மாவட்டச்செயலர்கள் வாழ்த்துரை வழங்க 
தீர்மானங்களை தீர்மானத்துடன் இயற்றிட 
வழி தெரியா ஊழியருக்கு ஒளிவிளக்காய் திகழ்ந்த 
தோழர்.ஜெகன் பிறந்த நாளன்று 
"இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து"
என கண்ணதாசன் பாடிய வழியில் 
மாநிலம் தழுவிய போராட்டம் என மாநாடு முடிவெடுக்க 
உரிமைக்குரல் எழுப்பி உணர்வுடன் 
நிறைவுற்றது.. ஒப்பந்த ஊழியர்களின் 
தமிழ் மாநில சிறப்பு மாநாடு..



No comments:

Post a Comment