Wednesday 14 May 2014

JTO பதவி உயர்வு வழக்கு 

  JTOவாக OFFICIATING செய்யும் TTA  தோழர்கள்
 சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு BSNL தலைமை நிர்வாகத்தின் 
மேலாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

BSNL நிர்வாகம் இந்த வழக்கில்  மேல் முறையீடு செய்யலாம் 
என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இப்பிரச்சினை 
மேலும் சிக்கலாகும் நிலை உருவாகியுள்ளது. 

JTO ஆளெடுப்பு விதி 2014 BSNL நிர்வாகத்தால் 
ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் கூட, மேற்கண்ட வழக்கில் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய இருப்பதாலும், பிரச்சினை நீதிமன்ற வரம்புக்குள் இருப்பதாலும்  இப்பிரச்சினையில் சிக்கல் தொடரும். 

இதனால் JTOவாக  OFFICIATING செய்யும் TTA  தோழர்களும், போட்டித்தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருக்கும் தோழர்களும் 
மேலும் சில காலம் அகலிகையாக காத்திருக்கும் நிலை தொடர்கின்றது . 

எனவே இப்பிரச்சினையை விரைவில் தீர்க்கக்கோரி 
மாநிலச்சங்கம் மத்திய சங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

நம்புவோம்... நல்லதே.... நடக்கும்... என...
மாநிலச்சங்க செய்தியிலிருந்து...

No comments:

Post a Comment