Thursday 25 June 2015

TTA கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை 

01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த TTA  தோழர்களுக்கு 
10/05/2010 முதல் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை வழங்கிட 
BSNL BOARD ஒப்புதல் அளித்துள்ளது. 

01/01/2007க்குப்பின் பணியில் சேர்ந்த 
TTA  தோழர்களுக்கு30 சத ஊதிய நிர்ணயம் செய்யப்படாததால் 
பெரும் ஊதிய இழப்பு தொடர்ந்தது. 

நமது NFTE  மத்திய சங்கமும் 
SNATTA சங்கமும் இணைந்து மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சினையை தீர்க்கக்கோரி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். 
தற்போது இந்த  பிரச்சினை முழுமையாக  தீர்க்கப்படா விட்டாலும் 
5க்கு 2 பழுதில்லை என்ற கணக்கில் தீர்வை எட்டியுள்ளது.

மேற்கண்ட முடிவு TTA தவிர 
வேறு கேடர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

01/01/2007க்குப்பின்  
பல ஆயிரம் தோழர்களுக்கு ஆண்டு உயர்வு  தேக்க நிலை தொடருகிறது..
சேவையில் மூத்தோர் இளையோர் சம்பள முரண்பாடு தொடருகிறது..
நாலு கட்டப்பதவி உயர்வால் ஏற்பட்ட குழப்பங்கள்  தொடருகிறது..
ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் செய்வதில் தாமதம் தொடருகிறது..
பதவிப்பெயர் மாற்றம் செய்வதில் அலட்சியம் தொடருகிறது..

இப்படியாக சலிப்புக்கள்  தொடர்ந்தாலும் 
ஆறுதல் பரிசாக TTA தோழர்களின் பிரச்சினை 
 தன்னால்  முடிந்தவரை  தீர்வை எட்டியுள்ளது.

No comments:

Post a Comment