Friday 29 January 2016

ஓய்வெதற்கு...உனக்கு?.. 
31/01/2016 அன்று பணி நிறைவு பெறும்
NFTE  மாநில துணைத்தலைவர்  தூத்துக்குடி
தோழர்.  பாலசுப்ரமணியன் தனது துணைவியாருடன்..

தோழர்.ஆர்.கே., அவர்களுடன் தோழர்.பாலு மற்றும்
அவரது அன்புத்துணைவியார் ஆனந்தவல்லி 

நிறை பணி...நிறைவு வாழ்த்து 

கறந்த பாலின் தூய்மை எங்கள் பாலு 
பிறந்த சேயின்  மென்மை  எங்கள் பாலு 

கண்ணியமிக்க வாய்மை எங்கள் பாலு 
கடமை மிக்க நேர்மை எங்கள் பாலு 

சங்கம்  காத்த   தங்கம்  எங்கள் பாலு 
சமாதானம்  வளர்த்த வெண்முத்து எங்கள் பாலு 

சுட்டால்  வெளுக்கும் சங்கு எங்கள் பாலு 
எதிரி தொட்டால்  சிலிர்க்கும் சிங்கம் எங்கள் பாலு 

தூத்துக்குடி என்றால் 
கடலில் முத்து.. கரையில் உப்பு 
அது மக்களுக்கு.. 

 தூத்துக்குடி என்றால் 
NFTEக்கு  பாலு... இயக்கத்திற்கு  பாலு 
இது எங்களுக்கு.. 

மூச்சடக்கி முத்துக்குளிக்கும் முத்து நகரிலே..
பேச்சடக்கி இயக்கம்  வளர்த்த தலைவனே..

கத்தும் கடலுக்கும்... சுத்தும் பூமிக்கும்..
என்றும் ஓய்வில்லை... ஓய்வில்லை...

உனக்கும் இனி ஓய்வில்லை...
சங்கப்பணியோடு.. சமுதாயப்பணியும் சேரட்டும்..
உன் சுமை கூடட்டும்... உன் பணி சிறக்கட்டும்...

வாழ்க நீ நூறாண்டு.. வளர்க நீ... பல்லாண்டு... 

அன்புடன் வாழ்த்தும் 
NFTE  தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி மாவட்டம் 

No comments:

Post a Comment