Monday 12 September 2016

நிலுவைப் பிடித்த விலக்கு

ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைகள்  ஏதேனும்  
தவறென்று தெரிய வரும் பட்சத்தில் அந்த நிலுவையை சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது  எனவும் 
அதனை சம்பந்தப்பட்ட இலாக்கா தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும்  உச்சநீதிமன்றம் தனது 18/12/2014ம் தேதிய தீர்ப்பில் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை BSNLலில் 
அமுல்படுத்தக்கோரி  சங்கங்கள் கோரிக்கை எழுப்பியிருந்தன. 

அத்தகைய நிலுவை தள்ளுபடி விவகாரங்கள் 
DOTக்கு உரிய பரிந்துரையோடு அனுப்பப்பட வேண்டும் எனவும் 
அதனை DOT  பரிசீலித்து செலவின இலாக்காவின் அனுமதியோடு 
உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் 
DOT வழிகாட்டுதல் வழங்கியிருந்தது. 

மேற்கண்ட DOTயின் வழிகாட்டுதலின்படி 
தவறான நிலுவைப்பிடித்த தள்ளுபடி விவகாரங்கள் 
மாநில நிர்வாகத்தின் உரிய ஒப்புதலோடு 
BSNL தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என CORPORATE அலுவலகம் 09/09/2016ல் உத்தரவிட்டுள்ளது.

நிலுவைப்பிடித்தத்திற்கு ஆளான  பணிபுரியும் தோழர்களும்... 
ஓய்வு பெற்ற சில தோழர்களும் நிலுவைப் பிடித்தத்தில் இருந்து விலக்குப்பெற தற்போது வழி பிறந்துள்ளது.

No comments:

Post a Comment