Thursday 22 September 2016

கண்ணிருந்தும்...

BSNL  அகன்ற அலைவரிசை இணைப்புக்கள் குறைந்து 
வருவதாக  நமது இணையதளத்தில் தகவல் தெரிவித்திருந்தோம். 
இராமநாதபுரத்தில் RSA  ஆகப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த தோழரும்... FNTO சங்கத்தின் மூத்த தலைவருமான அருமைத்தோழர்.இரகுவீர் தயாள் அவர்கள் தனது கவலையை கருத்துப்பகுதியில் தெரிவித்திருந்தார். முற்றிலும் நியாயமான அவரது கவலையை 
நமது தோழர்களின் சிந்தனைக்காக கீழே தருகிறோம்.
=======================================================================

மிக மலிவான விலையில் நமது நிறுவனம் 
அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ள நிலையிலும் 
இணைப்புக்கள் குறைவது கவலைக்குரியது.

திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அதைக்காட்டிலும் கவர்ச்சியாக அல்லது அதற்கு இணையாகவேனும் இருக்க வேண்டும்.
ஆனால் தனியார் 20  MB தரும் அதே வாடகையில் 
நாம் 2 MB என்றால் எப்படி?

சென்னையில் அதே வாடகையில் MB தருகிறார்கள்.
ஆனால் இலவச அழைப்புகள் இரவில் மட்டும்.
தனியார் நிறுவனம் எல்லா அழைப்புகளும் இலவசம் என்கிறதுஇதே வாடகையில்.. இதே வேகத்துக்கு.

நமது இணைப்புகளாவது ஒழுங்காக இருக்கிறதா?
பழுது என்றால் நாம் உடனே விரைகிறோமா?
அப்படியே ஓரிரு இடங்களில் விரைந்தாலும் பழுது நீக்க நம்மிடம்  தேவையான கருவிகள் இருக்கின்றனவா?
எத்தனை ஊர்களில் கேபிள் ரூட் வரைபடம் இருக்கிறது?
எத்தனை JTOக்களுக்குத் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட இடங்களில்  கேபிள் பில்லர்களில் ஸ்பேர் எவ்வளவு?
அதில் பழுதுபட்டது எவ்வளவு என்று தெரியும்?

தல நிலைமைகளை அபிவிருத்தி செய்யாமல்
உயர் மட்டங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளினாலோ ஊழியர்கள் ஊர்வலங்கள் போய் 
மக்களைச் சந்திப்பதாலோ மக்களின் மனம் மாறி விடுமா?

என் உறவினர் கோட்ட பொறியாளராக இருந்து 
ஓய்வு பெற்றவர். அவர் ஆர்வத்தில் போன மாதம் 
சுமார் 50 இணைப்புகளுக்கு கான்வாஸ் செய்து விண்ணப்பித்திருந்தார்.

ஒரு முறை (அது அவரது பத்தாவது நடையாம்) நானும் அவருடன் சென்றேன். அந்த இளநிலை அதிகாரி அலட்சியமாக அந்த ஏரியாவில் கேபிள் இருக்கிறதா என்று லைன்மேன் இன்னும் சொல்லவில்லை. அதனால் இப்போதைக்கு இணைப்பு கொடுக்க முடியாது என்று கூறினார். வந்தவர் ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால்தான் பொறுமையாக பதில் சொல்வதாகவும் இல்லையென்றால்
not feasible report கொடுத்து நிராகரித்திருப்பேன் என்றும் சொன்னார்.  இது  நடந்தது சென்னையில்

மேல் மட்டங்களுக்கு அவர் அளித்த புகார் இன்னும் நிலுவையில் இருக்கிறதுநிலைமை இப்படி இருக்க, மக்கள் நம்மைவிட்டு வெளியேறுவதைத் தவிர்ப்பது சிரமம்தான்.

நன்றி...
தோழர்.இரகுவீர் தயாள் - RSA ஓய்வு

No comments:

Post a Comment