Monday 12 September 2016

தமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம்

தமிழகத்தில் DELOITTE  குழுவின் பரிந்துரையான
 வணிகப்பகுதிகள் அமுலாக்கம் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ் மாநில நிர்வாகம் முதற்கட்டமாக இரண்டு வணிகப்பகுதிகள் உருவாக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

  • கோவை வணிகப்பகுதியில் குன்னூர் மாவட்டம் இணைக்கப்படும்.
  • தஞ்சை வணிகப்பகுதியில் குடந்தை மாவட்டம் இணைக்கப்படும்.

கோவை  PGM தலைமையிலான வணிகப்பகுதியாகவும்...
தஞ்சை GM தலைமையிலான வணிகப்பகுதியாகவும்... அறிவிக்கப்பட்டுள்ளது.

PGM தலைமையிலான வணிகப்பகுதியில்...
ஒரு PGM... ஆறு GM.. பன்னிரண்டு DGMகளும்...

GM தலைமையிலான வணிகப்பகுதியில்...
ஆறு  DGMகளும்...பணி செய்வார்கள்...

இதற்கான உத்திரவு 12/09/2016 அன்று
மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற மாவட்டங்களும் வணிகப்பகுதியில் இணைக்கப்படும்.

அதிகாரிகளும் உரிய எண்ணிக்கையில் இல்லாமல்...
தொழிலாளர்களும் உரிய எண்ணிக்கையில் இல்லாமல்...
நாளும் பொழுதும் இளைத்து வரும் காரைக்குடி மாவட்டத்தை 
விரைவில் மதுரை வணிகப்பகுதியில் இணைத்திட
மாநில நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment