Monday 26 September 2016

காரைக்குடித் துணை நிர்வாகமே..
விதிகளை வீதியில் தள்ளாதே..


DOT  காலத்திலிருந்து...
பதினாறு ஆண்டுகளுக்கும்  மேலாக
பரமக்குடி நகருக்கு பத்துக்கும் மேற்பட்ட TM தோழர்கள்
காத்திருப்போர் பட்டியலில் கவலையோடும்...
கண்ணீரோடும் காத்திருக்கும் வேளையிலே....

காத்திருப்போர் பட்டியலிலேயே இல்லாத ஒரு ஊழியருக்கு..
காரைக்குடி மாவட்டத்  துணை நிர்வாகம்..
கவனிப்பான தரிசனத்தால் .. உந்தப்பட்டு 
கரிசனத்தோடு மாற்றல் உத்திரவை வெளியிட்டுள்ளது...

மேற்கண்ட மாற்றல்...
விதிகளுக்கும் நியாயத்திற்கும்  முரணானது...
சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எந்த விதமான 
உடல் ஊனங்களும் குறைகளும் கிடையாது...
விற்பனைப் பிரிவில் வேலை செய்து வரும் அந்த ஊழியர் 
வாங்கும் சம்பளத்திற்கு வேலையே செய்யாமல் சுற்றி வந்தவர்...
பரமக்குடி போன்ற சாதிய மோதல் உள்ள இடத்தில்...
தொடர்ந்து சாதிப்பிரச்சினையை கிளப்பி வருபவர்...
பல ஆண்டுகளாக இலாக்கா அனுமதி இல்லாமல் 
வெளி நாட்டிற்கு சென்று பல லட்சங்களை சம்பாதித்தவர்...
சில அதிகாரிகளை சரிக்கட்டி வெளிநாடு சென்ற காலத்திற்கு..
சம்பளமும்... பதவி உயர்வும் சேர்த்துப் பெற்றவர்...
வாசனைக்குப்பிகளாலும்.. VAT69 குப்பிகளாலும்..
பலரை வளைத்துப்போட்டவர்..
இத்தனை பிரச்சினைகளையும் 
நேரடியாகவும்... எழுத்து மூலமாகவும் சுட்டிக்காட்டியும் 
காரைக்குடி மாவட்டத்துணை நிர்வாக அதிகாரிகள்..
அநியாயத்திற்குத் துணை சென்றுள்ளனர்....
சில தகப்பன்சாமிகளின் தான்தோன்றித்தனத்தால் வந்த வினை இது..

எனவே காரைக்குடி மாவட்டத்தில் 
தொழில் அமைதியைக் கெடுக்கும் 
நிர்வாகச்சிறு அதிகாரிகளின் 
நியாயமற்ற போக்கை எதிர்த்தும்...
அநியாயத்திற்கு துணை போகும்
நிர்வாகச்சீர்கேட்டைக் கண்டித்தும்..
காரைக்குடி மாவட்டம் முழுமையும் 

ஒத்துழையாமை இயக்கம்

நியாயங்கள் நிலை நிறுத்தப்படும் வரை 
அநீதி தடுத்து நிறுத்தப்படும் வரை 
ஓயாது நமது போராட்டம்....
தோழர்களே... களம் காண்போம்...
விதிகளைப் புறம் தள்ளி 
ஊழியரை வீதியில் தள்ளிய 
கொடுமை மாற்றுவோம்...

No comments:

Post a Comment