Friday 16 September 2016

குலசாமி...

அறிவென்னும் அகந்தை கொண்டவன்... 
வெள்ளை சாமி...
அவனிடம் அடங்கிக்கிடந்தவன் 
கருப்ப சாமி...

ராமசாமி பிறந்தார்...
அறிவென்னும் அகந்தை வெல்ல...
பகுத்தறிவென்னும் ஆயுதம் தந்தார்...

ஆயுதத்தைக் கையிலெடுத்தான்..
கருப்ப சாமி...
அடங்கிப் போனான் அகந்தை கொண்ட...
வெள்ளை சாமி..

வீழ்ந்தாலும் விட மாட்டான்... 
வெள்ளை சாமி...
நம்மைக் குறிவைத்து காலி செய்வான்...
குள்ள சாமி...

குள்ள சாமிகளை வென்றிடவே....
நம் குலசாமி...
ஈரோட்டு ராமசாமி பேர் சொல்வோம்....

விழிப்போடு இருப்போம்...
விழி மூடாது நெருப்பாக இருப்போம்...
மதமென்னும் மதம் வெல்வோம்....
சாதி என்னும் சாக்கடை அழிப்போம்....

செப்டம்பர்  17
பகுத்தறிவுப் பகலவன் 
தந்தை பெரியார் பிறந்த தினம்

2 comments:

  1. அருமையான பதிவு தன்மானஉணர்வூட்டிய ஈரோட்டு பூகம்பத்திற்கு காரைக்குடி தரும் புகழ்மாலை சிறப்பு

    ReplyDelete
  2. அருமையான பதிவு தன்மானஉணர்வூட்டிய ஈரோட்டு பூகம்பத்திற்கு காரைக்குடி தரும் புகழ்மாலை சிறப்பு

    ReplyDelete