Friday 14 April 2017

அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா
AITUC தலைவர் தோழர்.PLR அவர்களுடன் தோழர்கள்...
14/04/2017 அன்று காலை காரைக்குடியில் 
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் உருவச்சிலைக்கு 
AITUC, NFTE, NFTCL சார்பாக 
மூத்த தோழர்.PLR அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து 
கோஷங்கள் முழங்கிட செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.

மாலையில் NFTE சங்க அலுவலகத்தில்
பேச்சுப்பட்டறை நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
தோழர்.முருகன் தலைமை வகித்தார். 
மூத்த தோழர்கள் பழ.இராமச்சந்திரன், பூபதி, நாகேஸ்வரன், 
அஞ்சல் தலைவர் தோழர்.இராமன் மற்றும் தலைமையாசிரியர் தோழர்.குணசேகரன் ஆகியோர் பங்கேற்று இளந்தோழர்களுக்கு 
மனம் தொடும் வண்ணம் பேச்சுப்பயிற்சி அளித்தனர். 

AITUC, NFTE மற்றும் NFTCL இயக்கங்களின் முன்னணித்தோழர்கள் கலந்து கொண்டனர். NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி நன்றியுரைக்க கூட்டம் இனிதே முடிவுற்றது. 

தோழர்.நாகேஸ்வரன் அவர்களின் லோசனையின்படி 
ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் மற்றும் 
செப்டம்பர் 17 தந்தைப்பெரியார் பிறந்த நாள் ஆகியவை பேச்சுப்பட்டறை நிகழ்வுகளாக ஆண்டுதோறும் 
கொண்டாடப்படும் என முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment