Wednesday 5 April 2017

நாமார்க்கும்.. குடியல்லோம்..
தோழர்.தமிழ்மாறன் JE
NFTE மாவட்ட உதவிச்செயலர் 

சங்கத்தில் தலைவர்களாகச் செயல்படுபவர்கள்…
போட்டித்தேர்வெழுதி தங்கள் திறமையை வெளிப்படுத்தி…
இலாக்காப்பணியில் அதிகாரியாக உயர்வெய்தி
முன்னேற்றம் காணமாட்டார்கள்
என்றொரு எண்ணம் எல்லோருக்கும் உண்டு…
ஆனால் சங்கத்தலைவர்கள் 
யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல
என்று  காரைக்குடித் தோழர்கள்…
தங்களது செயலால் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்…

காரைக்குடித் தோழர்கள் 
உண்மையாய் உழைத்தவர்கள்…
யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல… என்று
ஊருக்கு உரக்கச்சொல்லும் வரிசையில்….

காரைக்குடி மாவட்ட உதவிச்செயலர்
தோழர்.தமிழ்மாறன் அவர்கள்…
JTO… JAO என 
இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருந்தார்..

கணக்கு அதிகாரியாகப் பொறுப்பேற்பது…
அவருக்கும்.. தோழர்களுக்கும்..
பல்வேறு வகையிலும் பயன்தரும் என்ற
நமது ஆலோசனையை ஏற்று
தோழர்.தமிழ்மாறன் JAO பதவியைத் தேர்ந்தெடுத்தார்...

தமிழகத்தில் JAO தேர்வில் வெற்றி பெற்றுள்ள
5 தோழர்களுக்கும் பயிற்சி ஆரம்பிக்கும்வரை  
தற்காலிகப் பதவி உயர்வு வழங்கிட
தமிழ் மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

விரைவில்.. 
OFFICIATING JAOவாகப் பொறுப்பேற்கவிருக்கும்
தோழர்.தமிழ்மாறன் அவர்களுக்கு 
நமது அன்பான வாழ்த்துக்கள்…

உறுதுணை புரிந்த 
AIBSNLEA சங்கத்திற்கு நமது நன்றிகள்…

1 comment: