Monday 10 April 2017

கம்பனிலும்... கலகம்
தஞ்சைத்தோழர் வல்லம் தாஜ்பால்
காரைக்குடி கம்பன் விழாவில் கவி பாடிய காட்சி
 

கடந்த 79 ஆண்டுகளாக…
கலை இலக்கிய விருந்தளிக்கும்…
காரைக்குடி கம்பன் விழா…
களை கட்டியது இந்தாண்டும்….
காரைக்குடியில் சென்ற ஆண்டே
கம்பன் அறக்கட்டளை இரண்டானது…
கம்பன் விழாவும் இரண்டானது….
கம்பன் கழகம்… கலகமானது…
கல்லுக்கட்டியில் ஒரு கம்பன்…
கம்பன் மணிமண்டபத்தில் ஒரு கம்பன்…
கம்பன் இரண்டானதால்…
காண்போருக்கு கொண்டாட்டம்…
காரைக்குடி மக்கள் நான்கு நாட்கள்
கம்பரசத்தில் மிதந்தனர்….
கவிதைப்பித்தன்  தலைமையில் நடந்த
கவியரங்கத்தில் வல்லம் தாஜ்பால்
கவி பாடினார்…
காரைக்குடி மக்களின் காதுகளில்…
கம்பன் கூழ் ஊற்ற வந்தேன் என்று சொல்லி…
கரவொலியை அள்ளிச்சென்றார்…
கம்பன் புகழ் சொல்லிச்சென்றார்…
காரைக்குடித் தோழர்களின் வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment