Wednesday 14 August 2019

விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தொடர்புடைய படம்

தாயின் மணிக்கொடி
தாழ்ந்து பறக்க விடமாட்டோம்...
பாரதியின் வரிகளை...
பரவசத்துடன் பாடுவோம்….
பாரதத்தின் புதல்வர்களிடையே
பாகுபாடுகளை அனுமதியோம். . .
இமயம் முதல் குமரி வரை...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...
இந்திய தேசம் நம் தேசம்.. . .

அனைவருக்கும் 
விடுதலைத் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்
----------------------------------------------------------
தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
 உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் 
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

கம்பத்தின் கீழ்நிற்றல்காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர்  - தங்கள்
 நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்

செந்தமிழ் நாட்டுப் பொருநர்
கொடுந்தீக்கண் மறவர்கள் சேரன்தன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர்
தாயின்   சேவடிக்கே பணி செய்திடு துளுவர்..

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
காலனும் அஞ்சக்கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்களொப்ப-நிற்கும்
 பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர்.

பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
 மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

பஞ்சநதத்துப் பிறந்தோர்-முன்னைப்
 பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
 தொண்டு நினைத்திடும் வங்கத்தினோரும்.

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
 சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க..
-    மகாகவி பாரதி -

No comments:

Post a Comment