Monday 26 August 2019

இன்னலை உடைத்தவர் 

நம் இன்னலை உடைத்த
அண்ணலை உடைத்தனர்...

உடைக்கட்டும்  விட்டு விடுங்கள்...

அண்ணல் அம்பேத்கர்...
பச்சை வயலில்..
பாழும் வெயிலில்..
பாடுபட்டவனை..
பச்சை மையில் ஒப்பமிட்டு...
பஞ்சு மெத்தையில் படுக்க வைத்தவர்...

அவரால்தான்... 
இடுப்புத்துண்டு முண்டாசானது... 

அவரால்தான்...
உரிமை பெற்றோம்.. 
அவரால்தான்...
உணர்வு பெற்றோம்.. 
அவரால்தான்...
உயர்வு பெற்றோம்.. 
அவரால்தான்...
எல்லாம் பெற்றோம்..

பெற்றுத்தந்தவன் சிலையை...
பெற்றவன்  சிலையை...
பிள்ளைகள் உடைக்க உரிமை இல்லையா ?
உடைக்கட்டும் விட்டு விடுங்கள்...

No comments:

Post a Comment