Thursday 29 August 2013

சாவும்... நோவும்.. 

காஞ்சிபுரம் நெசவுக்குப் புகழ்  பெற்றது என்று எண்ணியிருந்தோம்..
பாவம்.. அது வசவுக்கு மட்டுமே லாயக்கு என்பதை 
வலைத்தளத்தில் தெரிந்துகொண்டோம்.
கூடவே கூத்தில் கோமாளியாய் கோவை கொங்கர்கள்...

நம்முடைய வருத்தம்  இதுதான்..

தாரபாதாவின் வாரிசுகள் தரம் தாழ்ந்து போகலாமா?
தாரபாதா இவர்களைக்  கண்டிருந்தால் கேட்டிருந்தால்..
தன்  இன்னுயிர் நீத்திருப்பாரே..

ஏதோ தங்கள் தலைவரை இழிவு படுத்தி விட்டார்கள் என
எக்குத்தப்பாய் கரணம் அடித்து எகிறிக்குதிக்கும் இவர்கள்..

தமிழ் மாநிலச்செயலரை தோழர்.பட்டாபியை 
ஓய்வு பெற்ற மூத்த தோழர்களை..
இன்று வரை தொடர்ந்து தரம் தாழ்த்தி வசை பாடுவதேன்?

புகழ்பாடிகளாகவே இவர்கள் காலம் கழிக்கலாமே..
வசைபாடிகளாக மாறி இசை கெட்டுப்  போவதேன்?

எல்லா மனிதர்களுக்கும் சுயமரியாதை உண்டு..
எல்லாத்தலைவர்களும் 
இந்த இயக்கத்திற்கு தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர்.
இதில் உயர்வென்ன.. தாழ்வென்ன..

சாவும் நோவும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள் 
விமர்சனமும் அவ்வாறே..
விமர்சனம் செய்யத்துணிபவர்கள் 
அதைத்தாங்கி கொள்ளவும் வேண்டும்..
ஈரோட்டுக்குருக்கள் இதையெல்லாம் சொல்லித்தர வேண்டும்..

வலைத்தள லாவணி தொடரும்..

No comments:

Post a Comment