Thursday 19 September 2013

நிலமென்னும் நல்லாள் நகும் 

இன்று 20/09/2013 நடைபெற உள்ள சென்னை கூட்டுறவு சங்க 
RGB கூட்டத்தில் நிலம் பிளக்கும் விவாதம் நடைபெறும். 
நிலத்தை பிரித்தளிப்பது என்ற முடிவினை எட்டி விட்டு  அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டு தற்போது அதில் குடியிருப்பு கட்டுவோம் என்று சொல்வது பச்சை ஊழலுக்கு பாதை வகுக்கும். 

கூட்டுறவு சங்கம்  என்பது சங்கங்களை தாண்டிய  கூட்டுக்கொள்ளையின் அடையாளமாக ஆகிவிட்டது. நமது சென்னை கூட்டுறவு சங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஊழியர்களின் பெரும்பகுதி சம்பளத்தை கூட்டுறவு சங்கமே விழுங்குகின்றது. அந்த கூட்டுறவு சங்கத்தை விழுங்க பல சக்திகள், சகதிகள் வாய் பிளக்க ஆரம்பித்து விட்டன. 
வழக்கம் போல் ஜால்ரா சத்தங்களும் பெரிதாக கேட்க தொடங்கியுள்ளது. 
பொறுப்பில் இருப்பவர்கள்... 
தங்கள் இருப்பை விரிவு படுத்தும்  முயற்சியில் இறங்கி விட்டனர்.  
பெயரில் வீரமும் செயலில் சோரமும் என்பது இவர்களுக்கே பொருந்தும். 

இந்நிலையில் கூட்டுறவு சங்க பிரச்சினையில்
இதுவரை தலையிடாக்கொள்கையை கடைப்பிடித்து வந்த 
நமது மாநிலச்சங்கம் இம்முறை  அவ்வாறு இருக்காமல்  
தலையிட துவங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
மாநிலச்சங்கம்  தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
ஊழலுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும். 
உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுத்தர 
பெருமுயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment