Monday 16 September 2013

நிறை கெட்ட நிர்வாகம்

சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்  மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
என்பது வள்ளுவர் வாக்கு.

ஆனால் காரைக்குடி மாவட்ட நிர்வாகம்
மகளிரின் நிறை காக்கத்தவறிய
நிறைகெட்ட நிர்வாகமாக
நீதியற்ற நிர்வாகமாக மாறிவிட்டது.

காரைக்குடி துணைக்கோட்ட அலுவலகத்தில் TM ஆகப்பணிபுரியும் 
தோழியர். ஜூலி உடன் பணி புரியும் ஒரு தரங்கெட்ட மனிதனால்
சாதிய ரீதியாக கேவலப்படுத்தப்பட்டார். 
பெண்ணென்றும் பாராமல் வசைமாரி பொழியப்பட்டார். 
ஊழியர் குடியிருப்பில் ஒவ்வொரு நாளும் அவமானப்படுத்தபட்டார். இருவரும் FNTO சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 
ஏனையோர் தலையிட முடியவில்லை. 
இறுதியில் தோழியர். ஜூலி அலுவலகத்தில் பணியில் இருந்த போது 
மிக வக்கிரமமான வார்த்தைகளால்  அந்தக்கயவாளியால் அவமானப்படுத்தப்பட்டார்.  
இம்முறை பொறுப்பதற்கில்லை என்று நாம் உடன் தலையிட்டு தறிகெட்ட அந்த தறுதலையை தற்காலிகப்பணிநீக்கம்  செய்ய வைத்தோம்.

தோழியர். ஜூலிக்கு நியாயம் வழங்க வேண்டிய காரைக்குடி மாவட்ட நிர்வாகம் தற்போது அந்தக்கயவாளிக்கு துணை போக ஆரம்பித்துள்ளது.

காரைக்குடி மாவட்டப் பொதுமேலாளர் உயர் வகுப்பை சேர்ந்தவர்..
அவருக்கு கீழ் பணி புரிவோர் ஊழல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இணைந்து 
தவறு செய்தவனைத்  தடவிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தோழியர். ஜூலியை அவமானப்படுத்தியவன் மீது 
உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்..
காரைக்குடியை விட்டு இடமாற்றம் செய்ய வேண்டும்..
ஊழியர் குடியிருப்பை விட்டு காலி செய்திட வேண்டும்..
இல்லையேல்.. 
உரிய அமைப்புக்கள் மூலம் .. 
உரிய போராட்டங்கள் மூலம்..  
பாதிக்கப்பட்ட தோழியருக்கு நியாயம் கிடைத்திட 
போராடுவோம்..
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தின் 
மேல்தட்டு அதிகாரத்தனத்தை தகர்த்திடுவோம்..

No comments:

Post a Comment