Thursday 26 September 2013

ஜுனாகட்  
மத்திய செயற்குழு முடிவுகள்

மத்திய சங்க செயற்குழு குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் 
செப் 24/25 தேதிகளில் சிறப்புற நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய கூட்டாலோசணைக்குழு 4வது உறுப்பினராக ஜார்க்கண்ட் மாநிலச்செயலர்  தோழர்.மகாவீ ர் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நமது வாழ்த்துக்கள். 

கீழ்க்கண்ட கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
-:கோரிக்கைகள்:-

புதிய போனஸ் கணக்கீடு உருவாக்கப்பட வேண்டும். 
இந்த ஆண்டு குறைந்த பட்ச போனசாவது வழங்கப்பட வேண்டும்.

STAGNATION - தேக்க நிலை அகற்றப்பட வேண்டும்.

LTC மற்றும் மருத்துவப்படிகளை மறுபடியும் வழங்க வேண்டும்.

01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும். HRA 78.2 சத அடிப்படையிலேயே  வழங்க வேண்டும். 01/01/2007ல் இருந்து 78.2க்கான நிலுவை வழங்க வேண்டும்..

பிரதி மாதம் 12க்குள் GPF பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

கருணை அடிப்படை வேலைக்கான 55 மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். விரைந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

JAO/JTO/TTA/கேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் வேண்டும்.
JTO ஆக OFFICIATING  செய்யும் TTAக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்..

மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் 
ALLOWANCES வழங்கப்பட வேண்டும்..

TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

நாலுகட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
SC/ST தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 
NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 
அக்டோபர் 2வது வாரம் 
ஆர்ப்பாட்டம் 
பொதுச்செயலர் மற்றும் மாநிலச்செயலர்கள் பங்கு கொள்ளும் 
உண்ணாவிரதம்.
தோழர்களே.. தயாராவீ ர்..

No comments:

Post a Comment