Sunday 26 January 2014

விறு... விறு... விருதுநகர் மாநாடு

விருதுநகர் மாவட்ட மாநாடு 25/01/14 அன்று இராஜபாளையத்தில் விறுவிறுப்போடு  மிகுந்த சுறுசுறுப்போடு நடைபெற்றது. 
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் திட்டமிட்டுக்குவிந்ததால் இராஜபாளையம் மினி மதுரையாக காட்சியளித்தது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் சிறப்புரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.லிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தோழர்.அழகர்சாமி, 
முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் தோழர். இராமசாமி மற்றும் மதுரைப்பொதுமேலாளர் திருமதி.இராஜம்
 ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிர்வாகிகள் தேர்வில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படாததால்  
தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 
30/01/2014 அன்று விருதுநகரில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். காரைக்குடி தோழர்.மாரி மற்றும் 
பாண்டிச்சேரி தோழர்.அசோக்ராஜ் ஆகியோர் 
தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள்.

விறுவிறுப்பான காரம் நிறைந்த விருதுநகரில்.. 
ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து 
அவர்களை மகிழ்வித்திடும் மத்தாப்பாக..
கேளாச்செவியான நிர்வாகத்தின்..
செவிப்பறையைப்பிளந்திடும் 

சிவகாசிப்பட்டாசாக..
புதிய தலைமை.. வந்திட.. வென்றிட..
வாழ்த்துகின்றோம்..

No comments:

Post a Comment